சனி, 22 ஜூன், 2013

பா.ம.க., செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்



பாமக செயற்குழு கூடி சில தீர்மானங்களை நிறைவேற்றியது. அதில், வரும் மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்பது முக்கியமான தீர்மானம்.
பா.ம.க., செயற்குழுத் தீர்மான விவரம்:

தீர்மானம் -1 : நீதி கேட்டு போராடிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அய்யாவை கைது செய்த தமிழக அரசுக்கு கண்டனம்

தீர்மானம் - 2: வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குருவுக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுவதற்கு கண்டனம்

தீர்மானம் - 3: தடுப்புக்காவல் சட்ட கைது நடவடிக்கை: தமிழக அரசின் அடக்குமுறைக்கு கண்டனம்

தீர்மானம் - 4: மரக்காணம் கலவரம் குறித்து நீதிவிசாரணை நடத்தாததற்கு கண்டனம்

தீர்மானம் - 5: மரக்காணம் கலவரத்தில் உயிரிழந்தோருக்கு வீரவணக்கம்

தீர்மானம் -6: காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வுகாண அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாத தமிழக அரசுக்கு கண்டனம்

தீர்மானம் -7: வறட்சி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அரசுக்கு கண்டனம்

தீர்மானம் - 8 : விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி

தீர்மானம் - 9 : விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாததற்கு கண்டனம்

தீர்மானம் -10 : இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்

தீர்மானம் -11 : இலங்கையில் 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சிகளை முறியடிக்க வேண்டும்

தீர்மானம் -12 : தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு

தீர்மானம் -13 : தமிழகத்தில் முழு மதுவிலக்கு

தீர்மானம் - 14 : கல்விக்கட்டண கொள்ளை

தீர்மானம் - 15 : மாநிலங்களவைத் தேர்தல் - பா.ம.க. புறக்கணிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 2011&ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, எதிர்காலச் செயல் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக 27.07.2011 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இனி வரும் காலங்களில் திராவிடக் கட்சிகளுடனோ அல்லது தேசியக் கட்சிகளுடனோ கூட்டணி அமைப்பதில்லை என்றும், ஒத்த கருத்துள்ள கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளுடன் இணைந்து தனி அணியை ஏற்படுத்தி போட்டியிடுவது என்றும் முடிவெடுக்கப் பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த முடிவு அனைத்து தரப்பு மக்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கும் பெருமளவில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்கும்படி போட்டியிடுகின்ற சில கட்சிகள் எங்களுக்கு கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் பேசிய அனைவரும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தனித்துப் போட்டி என்ற முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நிர்வாகக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து இன்றைய செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. நிர்வாகக்குழு கூட்டத்தில் காணப்பட்ட அதே உணர்வே இன்றைய செயற்குழு கூட்டத்திலும் வெளிப்பட்டது.

மாநிலங்களவைத் தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல், புறக்கணிக்க வேண்டும் என்று செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கருத்தை ஏற்று வரும் மாநிலங்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை என்றும், மாநிலங்களவைத் தேர்தலை புறக்கணிப்பது என்றும் செயற்குழு கூட்டம் ஒரு மனதாக முடிவெடுக்கிறது.

திங்கள், 7 நவம்பர், 2011

வன்னியர் தோற்றம்

வன்னியர் என்ற சொல் "வன்மை" என்ற தமிழ் சொல்லிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.வன்மை என்ற சொல்லுக்கு 'வலிமை நிறைந்த' என்பது பொருளாகும்.வன்னியர் என்னும் சொல்லுக்கு நெருப்பிலிருந்து பிறந்தவர்கள் என்றும் வன்னி மரங்கள் அடர்ந்த பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் என்றும் இரு வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. வன்னியர்கள் தென்னிந்தியாவில் பெரும்பாலும் அதிகமாக காணப்படுகின்றனர்.இவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களாவர்.ஆந்திரா மற்றும் கர்னாடகாவில் இவர்கள் அக்னிவம்சி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
சீர்காழி வைத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் காணப்படும் கல்வெட்டுகள் கீழ்கண்ட செய்திகளை தெரிவிக்கின்றன: புராணகாலத்தில் அசுரர்களான வாதாபி,மஹி என்பர்கள் பிரம்மனை நோக்கி தவம் செய்து சாகாவரம் பெற்று உலகையே துன்புறுத்தி,கொடுஞ்செயல்கள் செய்து வந்தனர்.அவர்களை அழிக்க வேண்டி ஜம்பு மகாமுனி ஒரு யாகம் செய்தார்.அப்போது அந்த யாககுண்ட நெருப்பிலிருந்து வாளுடன் தோன்றிய வீரனொருவன் அந்த அசுரர்களை அழித்தான்.அவனின் வழிதோன்றல்கள் வன்னியராவர். இந்த வம்சத்தில் தோன்றிய ருத்ர வன்னிய மாகாராஜா தென்னிந்தியாவை ஆட்சி செய்தான்
திருவள்ளுவர் காலத்தை சேர்ந்த கல்லாடம் என்ற நூலில் வன்னி என்ற சொல் அரசன் என்ற பதத்தை குறிக்க பயன்படுத்த் ப்ட்டிருப்பது குறிப்பிட தகுந்த ஒன்றாகும்.
 நன்றி :  http://padayachigounders.blogspot.com/2008/12/blog-post.html 

welcome

hello my friends all are welcome  to this site